katunayake airport
இலங்கைசெய்திகள்

பிரதான கணினிகள் செயலிழப்பு! – கட்டுநாயக்கவில் பொலிஸ் பாதுகாப்பு

Share

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் வருகைதரும், வெளியேறும் பிரிவுகளின் கணினிகள் செயலிழந்து உள்ளன. இன்று (09) காலை 9 மணியளவில் திடீரென செயலிழந்துவிட்டன என திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் விமான நிலையத்தின் விமானப் பயணிகளால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, Manual System ஊடாக பதிவுகள் ​மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் தங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான காரியாலயத்துக்கு வருகைதரும் விமானப் பயணிகள், அமைதியற்ற முறையில் நடந்​து கொள்கின்றனர்.

இதனையடுத்து அந்தப் பிரிவுக்குள் பொலிஸார் அழைக்கப்பட்டு, பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்துக்குள் செயலிழந்துள்ள கணினிகளை சீர்செய்வதற்கான முயற்சிகளில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் கணினிகள் நேற்று (08) செயலிழந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...