இலங்கை
எகிப்து செல்கிறார் ஜனாதிபதி
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 06ஆம் திகதி எகிப்து நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
நவம்பர் 06ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை அங்கு நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி அங்கு செல்கின்றார்.
இந்த பயணத்தின்போது எகிப்பு ஜனாதிபதி உள்ளிட்ட அந்நாட்டில் உயர்மட்ட தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் பேச்சுவார்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்புவார்.
You must be logged in to post a comment Login