farming
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு கடன் வசதி!

Share

எதிர்வரும் பெரும்போகத்தில் அர்ப்பணிப்புடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு நெடோல்பிட்டிய பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் நேற்று (17) ஆரம்பமானது.

வழக்கமாக பெரும்போகத்தில் 8 இலட்சத்து 14 ஆயிரத்து 678 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும்

2022/2023 காலப்பகுதி பருவத்திற்கான கடன் ஆவணங்களை, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று காலை கையளித்துள்ளார். 11 பேருக்கு தலா 50 ஆயிரம் படி விவசாய கடன்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.

விவசாய கூட்டுறவு வங்கி மூலம் முன்னோடி திட்டமாக இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 2 இலட்சத்து 7 ஆயிரத்து 103 விவசாயிகளுக்கு, 7.1 பில்லியன் ரூபா இந்த கடனுதவிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 2022 வரை 1 இலட்சத்து 54 ஆயிரத்து 641 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களில், 5.4 பில்லியன் ரூபா திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் 350 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...