Dinesh Gunawardena
இலங்கைசெய்திகள்

உள்ளாட்சி தேர்தல் குறித்து பதற்றப்பட வேண்டியதில்லை!

Share

” உரிய நடைமுறைகளைப் பின்பற்றி சட்டத்துக்குட்பட்ட வகையில் உள்ளாட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும். இது விடயத்தில் எதிரணிகள் பதற்றப்பட வேண்டியதில்லை.”

இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது உள்ளாட்சிசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

” தற்போது செப்டம்பர்மாதம் தான் ஆகின்றது. இன்னும் காலம் உள்ளது. எதிரணிகள் இன்று கலக்கடைந்துள்ளன. அவ்வாறு பதற்றமடைய வேண்டியதில்லை. உரிய நேரத்தில், உரிய வகையில் தேர்தல் நடத்தப்படும். இது விடயத்தில் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிரணிகளின் அவசரத்துக்காக தேர்தலை நடத்த முடியாது, அதற்கான நடைமுறைகள் உள்ளன.” – என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...