download 8
இலங்கைசெய்திகள்

6 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்!

Share

இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் எனவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டத்தை மேற்கோள்காட்டி ReliefWeb இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மனிதாபிமான தகவல் இணையத்தளமான ReliefWeb, இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு நெருக்கடி தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, நாட்டில் சுமார் 5.3 மில்லியன் மக்கள் உணவைக் குறைத்து வருகின்றனர் அல்லது தவிர்க்கிறார்கள் மற்றும் குறைந்தது 65,600 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.

உயர் பணவீக்கம், வாழ்வாதார இழப்பு, உற்பத்தித்திறன் குறைதல் மற்றும் உணவு, மருந்து, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக நிலைமை மோசமடையக்கூடும் என்று ReliefWeb அறிக்கை கூறியுள்ளது.

வெளிநாட்டு உதவியின்மை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரிசி போன்ற முக்கிய உணவுகளின் அறுவடை வீழச்சி காரணமாக ஒக்டோபர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை நாட்டில் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...