இலங்கைசெய்திகள்

உயிர்களுடன் விளையாட வேண்டாம்- சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

Share
pfizer. 6785678
Share

கொரோனா நோய்க்கு (COVID 19) எதிரான தடுப்பூசிகளில் pfizer m RNA தடுப்பூசியானது உரிய முறையில் -60C தொடக்கம் -90 C பேணப்பட்டால் அதனுடைய ஆயுள் காலம் 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு அதிகரிக்கப்படலாம் என்பதை உரிய ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்யப்பட்டதாக சமுதாய மருத்துவ நிபுணர் முரளிவல்லிபுர நாதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA ) நிறுவனத்தாலும் உலக சுகாதார ஸ்தாபனத்தாலும் (WHO ) ஏற்றுக் கொள்ளப்பட்டு அமெரிக்கா முதலான உலகின் பல நாடுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசியின் விலை 19.5 அமெரிக்க டொலர் அல்லது இலங்கை ரூபாய்களில் 7000 ஆகும். உலக சுகாதார ஸ்தாபனம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் கோடிக்கணக்கில் செலவழித்து கொரோனா நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக இலங்கை போன்ற வறிய நாடுகளுக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக தருவித்து இருக்கிறது.

வடக்கில் குறிப்பாக வன்னி பகுதியில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களின் வீதம் குறைவாக இருப்பதுடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பலர் ஒரு தடவை கூட தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களில் அறிவுறுத்தப்பட்டது போல் வடக்கிலும் ஆயுள் காலம் நீடிக்கப்பட்ட pfizer m RNA தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து ஊடகங்களுக்கும் விபரங்கள் சுகாதார திணைக்களத்தினால் சில மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டு இருந்தது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க பொறுப்பு வாய்ந்த மருத்துவர்களையோ, துறைசார் மருத்துவ நிபுணர்களையோ கலந்தாலோசிக்காது அல்லது ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை ஆராயாது சில தமிழ் ஊடகங்கள் வேண்டுமென்றே ஏனைய மாகாணங்களில் நிராகரிக்கப்பட்ட காலாவதியான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு சிங்கள மருத்துவர் பாடசாலை மாணவர்களை பலவந்தப்படுத்துவதாக விஷமத்தனமான இனவாதப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

பாடசாலை மாணவர்கள் முன்னர் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத நிலையில் அவர்களுக்கு இப்போது இலங்கையில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

கனடா உட்பட பல நாடுகளில் தற்போது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் தொடக்கம் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்ற நிலையில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...