ranjith
அரசியல்இலங்கைசெய்திகள்

உடன் தேர்தலை நடத்தவும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

Share

” நாட்டை மீட்பதைவிடவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதே ஆட்சியாளர்களின் இலக்காக இருக்கின்றது. எனவே, நாடாளுமன்றத்தை கலைத்து உடன் தேர்தலை நடத்தவும்.”

இவ்வாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியவை வருமாறு,

” விவசாயிகள், மீனவர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நாட்டை பொருளாதார ரீதியில் மீட்பதைவிட, அதிகாரம் குறித்த ஆளுங்கட்சி அதிகம் சிந்திக்கின்றது. அதனால்தான் இருப்பை தக்க வைத்துக்கொள்ள மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறுகியதொரு அமைச்சரவையுடன் நாட்டை மீட்பதற்கான திட்டங்களை வகுக்கலாம். ஆனால் அதற்கான எண்ணம் இந்த அரசாங்கத்திடம் இல்லை. எனவே, நாடாளுமன்றத்தை கலைத்து, மக்கள் ஆணையுடன் புதியதொரு அரசாங்கம் உதயமாக, தற்போதைய ஆளுந்தரப்பு இடமளிக்க வேண்டும். .தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...