Gottabhayarajapaksha
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுக்கு விசா! – இலங்கை அரசே கோரிக்கை என்கிறது தாய்லாந்து

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் 90 நாட்கள் தங்குவதற்கான அனுமதியை வழங்குமாறு, இலங்கை அரசே கோரிக்கை விடுத்ததென தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Tanee Sangrat தனது ருவிட்டர் பதிவில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதுவரை எவ்வித அரசியல் அடைக்கலம் கோரிவில்லை. இது தொடர்பில் இலங்கை அரசே கோரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை கருத்தில்கொண்டு இந்த கோரிக்கை குறித்து ஆராய்வதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர உரிமம் இருப்பதால் கோட்டாபய ராஜபக்ச விசாவுடன் 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும். 2013ஆம் ஆண்டு தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்படவுள்ளது – என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து நோக்கி செல்லவுள்ளார் என ரொய்டர் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...