அரசியல்
நாடு விட்டு நாடு தாண்டும் கோட்டா!! – தாய்லாந்து பறக்கிறார் நாளை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிக்கப்பூரில் தற்போது தங்கியுள்ள கோட்டாபய, அவருக்கு வழங்கப்பட்ட விசா காலம் முடிவடையவுள்ள நிலையில், இலங்கை திருமொழிவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து செல்லும் அவர், அங்கு சிறிது காலம் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெற்றில் வெடித்த போராட்டம் காரணமாக, மாலைதீவு சென்ற கோட்டாபய அங்கிருந்து கடந்த ஜூலை 14 ஆம் திகதி முதல் சிங்கப்பூரில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login