vijaya
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு

Share

” எந்தவொரு தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் கையாளப்படும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசுக்காக ஜனாதிபதியிடம் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன, அதில் பிரதானமான ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் நீதி அமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

” போரால் பகைமை ஏற்பட்டிருந்தது. அந்த பகைமையை கருணைமூலம் வெல்லவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை நல்லாட்சியின்போது மேற்கொள்ளப்பட்டது. சாட்சியங்கள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். சிலருக்கு பிணை வழங்கப்பட்டது.

விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. சிலருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படும். எந்தவொரு தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். ” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...