vijaya
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு

Share

” எந்தவொரு தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் கையாளப்படும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசுக்காக ஜனாதிபதியிடம் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன, அதில் பிரதானமான ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் நீதி அமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

” போரால் பகைமை ஏற்பட்டிருந்தது. அந்த பகைமையை கருணைமூலம் வெல்லவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை நல்லாட்சியின்போது மேற்கொள்ளப்பட்டது. சாட்சியங்கள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். சிலருக்கு பிணை வழங்கப்பட்டது.

விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. சிலருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படும். எந்தவொரு தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். ” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...