ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.
முக்கியமான சில அமைச்சரவைப் பத்திரங்களுக்கு இதன்போது அனுமதி வழங்கப்படவுள்ளது.
அத்துடன், சர்வக்கட்சி அரசு சம்பந்தமாகவும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
சர்வக்கட்சி அரசு தொடர்பில், கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தவுள்ளார்.
#SriLankaNews
Leave a comment