இலங்கை
எரிபொருள் பெற்றுக்கொள்ள பொலிஸாருக்கு கட்டுப்பாடு!
பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் .நிரப்புவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் தமது தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு அனுமதிப்பது என்றும், அலுவலகத் தேவைக்கு தமது தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் பொலிஸாரின் விவரங்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலகத்துக்கு சமர்ப்பித்து, பிரதேச செயலரின் அனுமதி பெற்றே அதற்கு எரிபொருள் நிரப்பலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login