இலங்கை
ஜனாதிபதி மாளிகையில் மின் அழுத்தி திருடியவர் கைது!
ஜனாதிபதி மாளிகையில் மின் அழுத்தி திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது சந்தேகநபர் இந்த மின் அழுத்தியை திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அலரி மாளிகையில் இரண்டு தொலைக்காட்சிகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
You must be logged in to post a comment Login