ponseka
அரசியல்இலங்கைசெய்திகள்

கொழும்பில் தங்கியிருந்து போராட வேண்டும்!

Share

” ஒவ்வொரு மாதத்திலும் 9 ஆம் திகதி மட்டுமல்ல, ஒரு மாதமாவது, மக்கள் கொழும்பில் தங்கியிருந்து போராட வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டுக்காக போராடிய இளைஞர்களை வேட்டையாடி, அவர்களை சிறையில் அடைப்பதற்கே தற்போது முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் மட்டுமே போராட்டக்காரர்கள் இருப்பதாக அரசு நம்புகின்றது. ஆனால் நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் உள்ளனர். மக்கள்தான் போராட்டத்தின் பங்குதாரர்கள். எனவே, சிறையில் அடைப்பதன் மூலம் மக்கள் புரட்சியை ஒடுக்க முடியாது.

மக்கள் போராட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்க நான் தயார். ஒரு நாளுக்கு மட்டுமல்ல, ஒரு மாதமாவது கொழும்பில் தங்கியிருந்து, நாட்டை மீட்க மக்கள் முன்வர வேண்டும்.” எனவும் பொன்சேகா அழைப்பு விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...