அரசியல்
கோட்டாவுக்கு சிங்கப்பூரில் விசா நீடிப்பு!
சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவை அனிஃருந்து வெளியேற்றுமாறு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் அவருக்கு சாதாரணமாக வழங்கப்படும் 15 வழங்கப்பட்டுள்ளது என சிங்கப்பூர் அரசு தெரிவித்திருந்தது. தற்போது விசா மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என தகவல் உறுதிப்படுத்தியுள்ளன.
கோட்டாபய ராஜபக்சஷ விரைவில் இலங்கை திரும்புவார் எனவும், அதற்கான சரியான காலம் தெரியாது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login