image bb27512991
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகை செப்பு உருண்டைகளுடன் மூவர் கைது!

Share

கடந்த ஜூலை மாதம் 09 இடம்பெற்ற போராட்டத்தில் ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அங்கு பல பொருட்கள் திருட்டு போயுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்போல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையில் திரை அணிகலன்களாக பயன்படுத்தப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட 40 செப்பு உருண்டைகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட செப்பு உருண்டைகளை பழைய உலோகமாக விற்பனை செய்ய முற்பட்ட வேளை, இவர்கள் வெலிக்கடை பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

28, 34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள் ராஜபகிரிய ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த மூவரும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...

25 69020579437a3
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்தது

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

25 6901f9eea7d4a
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிப்பு குறித்து கொழும்பில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை.

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் மீதமுள்ள தனியார் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவதற்காக இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறுவதை...

25 69020d87ab94b
இலங்கைசெய்திகள்

பாடசாலை நேரம் நீடிப்பு: போக்குவரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 05 முதல் தரம் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின்...