Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை! – சபாநாயகர்

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜுலை 13ஆம் திகதி பதவி விலகுவார், 13 ஆம் திகதிக்குள் அவரின் இராஜினாமாக் கடிதம் கிடைக்கப்பெறும் என சபாநாயகர் இரு தடவைகள் நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.

எனினும், இன்று ஜுலை 14. இதுவரை பதவி விலகல் கடிதம் கிடைக்கப்பெறவில்லை என தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர்.

சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமை காரணமாக அதனை குறித்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஜனாதிபதி தனி விமானம் மூலம் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6902bb859df27
இலங்கைசெய்திகள்

விசா விண்ணப்பதாரர்களுக்கு இந்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

இந்திய விசா மற்றும் தூதரக சேவைகள் தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் (High Commission of...

25 690253c5e39ee
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவருக்குக் கொலை மிரட்டல்! – போலீசார் விசாரணை தீவிரம்!

ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு “ஹந்தயா”...

25 69024001ac0cb
இலங்கைசெய்திகள்

கைவிலங்குடன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய முக்கிய குற்றவாளி – போலீசார் தீவிர தேடுதல்!

அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் இருந்தவேளை திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் கைவிலங்குகளுடன்...

25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...