அரசியல்
சபாநாயகர் அறிவிப்பே இறுதியானது! – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விடுக்கப்படும் அறிவிப்புகள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் மட்டுமே வெளியிடப்படும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சபாநாயகரால் விடுக்கப்படும் அறிவிப்புகளை மட்டுமே, ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ஏற்குமாறு ஜனாதிபதி செலயகம் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
முன்கூட்டியே ஜனாதிபதி பதவி விலகுவார் என பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று காலை அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி தரப்பு இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login