பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீடு நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களுள் ஒருவர் 19 வயதான கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஏனையவர்கள் கடவத்த மற்றும் காலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment