இலங்கை
தீர்வைப் பெறுவதற்கு விரைந்து செயற்படுங்கள்! – அமெரிக்கா வலியுறுத்து
நீண்ட கால தீர்வைப் பெறுவதற்கு விரைந்து செயற்படுமாறு இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்றைய தினம் அரசுக்கெதிரான மாபெரும் போராட்டத்தில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையிலேயே அமெரிக்க மேற்படி வலியுறுத்தியுள்ளது.
மேலும், எந்தவொரு புதிய அரசாங்கமும் “நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய மற்றும் இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்யும் தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்துவதற்கு விரைவாக செயல்பட வேண்டும்” எனவும்அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login