இலங்கைசெய்திகள்

வீதி அபிவிருத்திக்கு மட்டும் 44 கோடி!!

Share

கடந்த இரண்டு வருடங்களில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக மாத்திரம் செலவிடப்பட்ட தொகை 44 ஆயிரத்து 300 கோடி ரூபா என நிதியமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2021ஆம் ஆண்டு அதற்கான செலவு இருபத்தொராயிரத்து முந்நூறு கோடி ரூபாவாகவும், 2020ஆம் ஆண்டில் இருபத்து மூவாயிரம் கோடி ரூபாவாகவும் செலவாகியுள்ளது.

கடந்த ஆண்டு, ஒருங்கிணைந்த வீதி மேம்பாட்டுத் திட்டத்துக்காக நான்காயிரத்து எண்ணூற்று நாற்பது கோடி ரூபாவும், பிரதான வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளை அணுகுவதற்கும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வீதி அமைப்பதற்கும் நான்காயிரத்து எண்ணூற்று இருபத்தி ஆறு கோடி ரூபா செலவிடப்பட்டது.

மேலும், மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்காக முந்நூற்று ஐம்பத்தைந்து கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக செலவிடப்பட்ட தொகை ஆயிரத்து முந்நூற்று முப்பத்திரண்டு கோடி ரூபாவாகும்.

கொழும்பின் வெளிவட்ட வீதிக்கு நூற்றியாறு கோடி ரூபாவும், கோபுரங்கள் மீது உத்தேச துறைமுக நுழைவு வீதிக்கு நானூற்றி ஐம்பத்தைந்து கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...