இலங்கைசெய்திகள்

வீதி அபிவிருத்திக்கு மட்டும் 44 கோடி!!

Share

கடந்த இரண்டு வருடங்களில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக மாத்திரம் செலவிடப்பட்ட தொகை 44 ஆயிரத்து 300 கோடி ரூபா என நிதியமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2021ஆம் ஆண்டு அதற்கான செலவு இருபத்தொராயிரத்து முந்நூறு கோடி ரூபாவாகவும், 2020ஆம் ஆண்டில் இருபத்து மூவாயிரம் கோடி ரூபாவாகவும் செலவாகியுள்ளது.

கடந்த ஆண்டு, ஒருங்கிணைந்த வீதி மேம்பாட்டுத் திட்டத்துக்காக நான்காயிரத்து எண்ணூற்று நாற்பது கோடி ரூபாவும், பிரதான வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளை அணுகுவதற்கும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வீதி அமைப்பதற்கும் நான்காயிரத்து எண்ணூற்று இருபத்தி ஆறு கோடி ரூபா செலவிடப்பட்டது.

மேலும், மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்காக முந்நூற்று ஐம்பத்தைந்து கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக செலவிடப்பட்ட தொகை ஆயிரத்து முந்நூற்று முப்பத்திரண்டு கோடி ரூபாவாகும்.

கொழும்பின் வெளிவட்ட வீதிக்கு நூற்றியாறு கோடி ரூபாவும், கோபுரங்கள் மீது உத்தேச துறைமுக நுழைவு வீதிக்கு நானூற்றி ஐம்பத்தைந்து கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 3
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு, தமது நாட்டு மக்களுக்கு அமெரிக்க வெளியுறவு...

18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...