kar
அரசியல்இலங்கைசெய்திகள்

ஒட்டுமொத்த அரசும் பதவி விலக வேண்டும்! – பேராயர் கொந்தளிப்பு

Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும்.” – என்று கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் மதத் தலைவர் என்ற ரீதியிலும் நாட்டின் பிரஜை என்ற அடிப்படையிலும் தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என்பதால், நாட்டு மக்களுக்காக இந்த கோரிக்கையை விடுக்கின்றேன்.

இன்று எமது நாடு எதிர்நோக்கியுள்ள உக்கிரமான நெருக்கடி மற்றும் அசௌகரியமான சூழ்நிலைக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டியது ஜனாதிபதியும், கடந்த இரண்டரை வருடங்களாக அரசால முன்னெடுக்கப்பட்ட குறுகிய மனபாங்குடனான சர்ச்சைக்குரிய தீர்மானங்களுமே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முழு நாட்டு மக்களினதும் நம்பிக்கையை இழந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் தொடர்ந்தும் பதவியில் இருப்பது, கடினமான சூழ்நிலையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்ப பாரிய தடையாக காணப்படுகின்றது.

மக்கள் எதிர்பார்க்கும் முறையான மாற்றத்தை, நம்பிக்கை மற்றும் வௌிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதற்கு சர்வ கட்சியுடனான இடைக்கால அரசை ஸ்தாபிக்க முடியும். கருத்துக்கணிப்பினூடாக பொதுத்தேர்தலுக்கு செல்ல முடியும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...