இலங்கை
அளவெட்டியில் டீசல் பதுக்கியவர் கைது!
அளவெட்டியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர் நேற்று மாலை தெல்லிப்பழை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீசலை பதுக்கி விற்பனை செய்வதாக பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் பொலிசார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது 291 லீற்றர் டீசல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டதோடு டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய கடை உரிமையாளரையும் பொலிசார் கைது செய்தனர்.
You must be logged in to post a comment Login