download 5 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கந்தக்காடு முகாமுக்கு விரைகிறது மனித உரிமை ஆணைக்குழு!

Share

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவொன்று, கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு இன்று (01) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

குறித்த முகாமில் ஏற்பட்ட நிலைவரம் தொடர்பில் அதிகாரிகளிடமும், கைதிகளிடமும் வாக்குமூலம் பெறுவதற்கும், உண்மையை கண்டறியும் நோக்கிலுமே குறித்த குழுவின் விஜயம் அமையுவுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் கைதிகளில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 600 இற்கும் மேற்பட்ட கைதிகள் கைதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் ஆரம்பமானது. தப்பிச்சென்றவர்களில் 653 பேர் சரணமடைந்துள்ளனர். எஞ்சிய 70 பேரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் தொடர்கின்றது.

புனர்வாழ்வு மையத்தில் கொழும்பு, மோதரை பகுதியை சேர்ந்த இளைஞர், அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என சக கைதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது உரிமைகள் மீறப்படுவதாகவும், அடக்கி ஆளப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...