அரசியல்
பத்து எம்.பிக்களுக்கு இரட்டைக் குடியுரிமை!


இரட்டைக் குடியுரிமை உடைய 10 அரசியல்வாதிகள், தற்போதைய நாடாளுமன்றத்தில் எம்.பி. பதவியை வகிக்கின்றனர் என ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தச் சட்டமூலம் நிறைவேறினால் அந்த 10 பேரும் எம்.பி. பதவியை இழக்க நேரிடும் எனத் தெரியவருகின்றது.
21 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ள ‘இரட்டைக் குடியுரிமை தடை’ என்ற ஏற்பாட்டை நீக்கிக்கொள்வதற்கு இவர்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி 10 பேரில் மலையக அரசியல்வாதி ஒருவரும் உள்ளடங்குகின்றார். எனினும், வீசா இன்றி இந்தியாவுக்குச் செல்வதற்கான ஓர் ஏற்பாட்டையே அவர் வைத்துள்ளார் எனவும், அது இரட்டைக் குடியுரிமை அல்ல எனவும் தெரியவருகின்றது.
எனவே, 21 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால்கூட அவரின் பதவிக்குச் சிக்கல் ஏற்படாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login