இலங்கை

களுத்துறையில் இன்று இருவர் சுட்டுப் படுகொலை!

Published

on

தெற்கில் அண்மைய நாட்களாகத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இன்று களுத்துறை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

42 வயதுடைய நபரே இதன்போது பலியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு சந்தேகநபரும் கைதுசெய்யப்படவில்லை.

பாணந்துறை – நிர்மலா மாவத்தையில் வைத்து ஒருவர் இன்று முற்பகல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மற்றும் உயிரிழந்த நபர் குறித்தும் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version