CEB
இலங்கைசெய்திகள்

இலங்கை மின்சார சபைக்கு கோப் குழு அழைப்பு!

Share

இலங்கை மின்சார சபை எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 07 ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபை, 08 ஆம் திகதி மொறட்டுவைப் பல்கலைக்கழகம் என்பனவும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன. கோப் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையில் கூடவுள்ளது.

அதேபோன்று, அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவின் சில கூட்டங்களும் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 07 ஆம் திகதி கமத்தொழில் அமைச்சு, 08 ஆம் திகதி இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்படுத் திணைக்களம், 09 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சு என்பன கோபா குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக எதிர்வரும் 10 ஆம் திகதி நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, உணவு ஆணையாளர் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், சதொச நிறுவனம், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை, தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம், இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் அதிகாரிகளின் பங்குபற்றலில் நடைபெறவுள்ளது.

கோபா குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் கூடவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...