வன்முறை
அரசியல்இலங்கைசெய்திகள்

‘மே 9’ வன்முறையில் மேலுமொருவர் சாவு!

Share

இம்மாதம் 9 ஆம் திகதி கொழும்பு – கொள்ளுப்பிட்டி பெரஹர மாவத்தை மற்றும் பேர வாவிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நடைபாதையில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருந்த ஒருவர் உயிரிழந்தார்.

குளியாப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 47 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் கடந்த 9ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தலை மற்றும் மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்ய கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...