அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் நாடகங்களை விடுத்து தீர்வை மேற்கொள்ளுங்கள்! – சஜித் வலியுறுத்து

1578038553 sajith premadasa opposition leader 5
Share

சர்வதேசத்தை திருப்திப்படுத்த 13 பிளஸ் எனவும், உள்நாட்டில் அரசில் இருப்பை தக்க வைக்க 13 மைனஸ் எனவும் கூறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றாமல், 13 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக வழங்கப்பட்ட அரசியல் தீர்வை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” 30 வருடகால போரை முடிவுக்குகொண்டுவருவதற்கு பெரும் பங்காற்றிய படையினரை இந்நாளில் நினைவுகூருகின்றேன். அதேபோல வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கருத்துகளையும் பெறப்பட்டு உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

13 பிளஸ் எனவும், 13 மைனஸ் எனவும் அரசியல் நாடகமாடாமல், 13 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக வழங்கப்பட்ட தீர்வை பாதுகாக்க வேண்டும்.

மே – 09 ஆம் திகதி நடைபெற்ற சம்பவங்களை நாம் கண்டிக்கின்றோம். வன்முறையுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மே 06 ஆம் திகதி அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் இப்படியான சம்பவம் இடம்பெறுவதற்கு அடிப்படை காரணியாக அமைந்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.

அலரிமாளிகையில் இருந்துதான் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தாக்குதல் நடத்தியதால்தான் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. அரச பயங்கரவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கவலையை வெளிப்படுத்திக்கொள்கின்றோம். மே – 09 மற்றும் அதற்கு பின்னர் நடைபெற்ற சம்பவங்களை நாம் அனுமதிக்க போவதில்லை. சிலர் இனவாதத்தை தூண்டுவதற்குகூட முற்பட்டனர். பொறுப்புக்கூற வேண்டியவர்கள், தகுதி தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...