அரசியல்இலங்கைசெய்திகள்

சிங்களவர் தேவையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் முயற்சி! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

Share
IMG 20220516 WA0028
Share

நாகவிகாரை பிக்குவின் கோரிக்கைக்கமையவும் விகாரைக்கு வந்துபோகிறவர்களின் பொழுதுபோக்கு வசதிக்காகவுமே ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது. அதனால் அதன் தேவைகளை நிறைவேற்றவே வட மாகாண ஆளுநர் கேட்கிறார்.இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இன்று கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போது, ஆரியகுளத்தில் வெசாக் கூடுகளை கட்ட அனுமதிக்காவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடமாகாண ஆளுநர் எச்சரிக்கை விடுத்ததாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண ஆளுநரின் கருத்தை நாம் கண்டிக்கின்றோம். அது மிகப் பிழையான கருத்து. யதார்த்தம் என்னவென்றால் இனவெறி கொண்ட ஜனாதிபதி தயவில் இருக்கின்ற ஒருவரின் கருத்துக்கு முண்டு கொடுக்கும் வகையில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு சிங்கள தேசியவாதத்திற்கு முண்டு கொடுத்து அவர்கள் நல்ல பிள்ளைக்கு நடிக்க வெளிக்கிட்டு மாட்டுப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதனை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கு அருகில் இருக்கின்ற குளத்தைப் புனரமைத்து இருக்க முடியும். அது தமிழ் மக்கள் நடமாடக் கூடிய ஒரு மிக முக்கியமான பகுதியில் உள்ள குளம். அதை செய்யாமல் விட்டுவிட்டு இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் செயற்படும் ஒருவரின் நிதியுதவியுடன் ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது.

நாகவிகாரை பிக்குவின் கோரிக்கைக்கமையவே ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது. நாக விகாரைக்கு வந்துபோகிறவர்களின் பொழுது போக்கு வசதிக்காகவே அது புனரமைக்கப்பட்டது. அதனை நிறைவேற்றவே ஆளுநர் கேட்கிறார். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இதனை திருத்தியதால் எமக்கு என்ன பயன்? – என்றார்.

#SriLankaNews

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...