” இந்திய படைகள் இலங்கையில் களமிறக்கப்படலாம்.” – என ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை இலங்கைக்கான இந்திய தூதரகம் நிராகரித்துள்ளது.
இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய படைகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்தே அது தொடர்பில் பல கோணங்களில் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
2 Comments