gota 3
அரசியல்இலங்கைசெய்திகள்

‘கோட்டா கோ கம’வில் தங்கியிருப்போர் உடன் வெளியேறுக! – ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் எச்சரிக்கை

Share

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கொழும்பு – காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’வில் கூடியிருக்கும் இளைஞர்களும், யுவதிகளும் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்க முடியாது என்று பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தின் கூரையில் ஒலிபெருக்கியைப் பொருத்தி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாத காலம் காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களும், யுவதிகளும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆளும் தரப்பின் குண்டர் குழுக்களின் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தனர்.

இதையடுத்து நாடு முழுவதும் அமைச்சர்களினதும், நாடாளுமன்ற உறுப்பினர்களதும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

அதேநேரம் நாடு முழுவதும் தற்போதும் பதற்றமான, குழப்பமான சூழல் நீடித்து வருகின்றது. இந்நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் மற்றும் கடந்த 9ஆம் திகதி மாலை 7 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் ஆகியவை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்தவொரு நபரும் பொது இடங்களிலோ அல்லது பொது மைதானப் பகுதிகளிலோ கூடியிருப்பதற்குத் தடை விதிக்கப்படுகின்றது எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...