Mano
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையர்களாக ஒண்றிணையுங்கள்! – நாட்டு மக்களிடம் மனோ வேண்டுகோள்

Share

மங்கள சமரவீரவை மனதில் கொண்டு முதல் நிபந்தனையாக, “இலங்கையர்” என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர வேண்டும். “இலங்கையர்”, அடையாளத்தை காப்பாற்ற வேண்டும். – இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“இலங்கையர்” என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர வேண்டும். “இலங்கையர்”, அடையாளத்தை காப்பாற்ற வேண்டும்.

இரண்டாவதாக, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற நீதியின் ஆட்சியை இலங்கையில் நாம் கொண்டு வர வேண்டும்.

அடுத்தது, “பன்மைத்துவம்”. இலங்கை என்பது பல மொழி பேசும், பல மதங்களை பின்பற்றும், பல இனத்தவர் வாழும் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதையடுத்து, “மதசார்பின்மை”. மங்களவும், நானும் இதில் மிகவும் உடன்பாட்டாளர்கள். அதாவது, மதத்தலைவர்கள், குறிப்பாக தேரர்கள் விகாரைகளுக்கும், குருக்கள் கோவில்களுக்கும், மெளளவிகள் மசூதிகளுக்கும், பிதாக்கள் தேவாலயங்களுக்கும் போய் மக்களை வழி நடத்த வேண்டும்.

அரசியலை வாக்களிக்கும் மக்களுக்கும், வாக்கு வாங்கி வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் விட்டு விட வேண்டும். 225 பேரும் பிழையானவர்கள் என்றால், அவர்களை நீக்கி சரியான சரியான 225 பேரை மாத்திரம் தெரிவு செய்யுங்கள்.

முதற்கட்டமாக இன்று, நாம் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற முறையில், 21ம் திருத்தம் என்ற வரைபை சபாநாயகருக்கு சமர்பித்துள்ளோம். அதில் ஜனாதிபதி முறைமையை அகற்ற கூறியுள்ளோம்.

“கவுன்சில் ஒப் ஸ்டேட்” என்ற புதிய அரசியலமைப்பு யோசனையையும் கூறியுள்ளோம். அது என்ன? 225க்கு மேலதிகமாக தொழில் வல்லுனர்கள், இளைஞர்கள், பெண்கள் தமது பிரதிநிதிகளை நியமிக்க வழி ஏற்படுத்துகிறோம்.

அடுத்து, அரசுக்கு எதிராக, ஜனாதிபதிக்கு எதிராக, நம்பிக்கை இல்லா பிரேரணையை சில தினங்களில் நாம் சமர்பிப்போம். அதன் பிறகு 225 பேரில் “மக்களுடன் நிற்பவர் யார்”, “கோத்தாபயவுடன் நிற்பவர் யார்” என்பதை மக்களால் தெளிவாக அறிய முடியும். – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...