Selvam
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களின் போராட்டத்தை சிங்கள மக்கள் ஏற்க ஆரம்பித்துள்ளனர்! – சிறந்த மாற்றம் என்கிறார் செல்வம்

Share

” தமிழர்களின் போராட்டம் நியாயமானதுதான் என்பதை சிங்கள மக்களும் இன்று ஏற்க ஆரம்பித்துள்ளனர். அது பற்றி கதைக்க ஆரம்பித்துள்ளனர். இது சிறந்த மாற்றமாகும். ” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” புலிகள் இருந்திருந்தால், இந்நேரம் தமக்கு உணவளித்திருப்பார்கள் என சிங்கள மக்கள் கருதுகின்றனர். அவ்வாறு உணவு பொதி வழங்கப்பட்ட வரலாறும் உள்ளது. அரசுக்கு எதிராக மூவின மக்களும் போராடுகின்றனர். சிறந்த புரிந்துணர்வு வந்துள்ளது.

ரம்புக்கனையில் கொல்லப்பட்டவருக்கு வடக்கு, கிழக்கிலும் அஞ்சலி செலுத்தப்படுகின்றது. காலி முகத்திடல் போராட்டத்துக்கு தமிழர்களும் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந் நாட்டில் நாம் அனைவரும் ஒன்றுமையாக வாழ வேண்டும். எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.” – என்றார் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
875262697 1
இலங்கை

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம் பணம் பறித்த கும்பல் கைது!

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை...

image 1000x630 13
இலங்கை

குற்றவாளிகளைப் பிடிக்க இன்டர்போல் உதவி: குற்றவாளிகளை நாடு கடத்த நடவடிக்கை

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நேர்மறையான நடவடிக்கைகளை இன்டர்போல்  பாராட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக,...

image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...