Selvam
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களின் போராட்டத்தை சிங்கள மக்கள் ஏற்க ஆரம்பித்துள்ளனர்! – சிறந்த மாற்றம் என்கிறார் செல்வம்

Share

” தமிழர்களின் போராட்டம் நியாயமானதுதான் என்பதை சிங்கள மக்களும் இன்று ஏற்க ஆரம்பித்துள்ளனர். அது பற்றி கதைக்க ஆரம்பித்துள்ளனர். இது சிறந்த மாற்றமாகும். ” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” புலிகள் இருந்திருந்தால், இந்நேரம் தமக்கு உணவளித்திருப்பார்கள் என சிங்கள மக்கள் கருதுகின்றனர். அவ்வாறு உணவு பொதி வழங்கப்பட்ட வரலாறும் உள்ளது. அரசுக்கு எதிராக மூவின மக்களும் போராடுகின்றனர். சிறந்த புரிந்துணர்வு வந்துள்ளது.

ரம்புக்கனையில் கொல்லப்பட்டவருக்கு வடக்கு, கிழக்கிலும் அஞ்சலி செலுத்தப்படுகின்றது. காலி முகத்திடல் போராட்டத்துக்கு தமிழர்களும் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந் நாட்டில் நாம் அனைவரும் ஒன்றுமையாக வாழ வேண்டும். எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.” – என்றார் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...