maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்டெடுக்க 20 ஐ ஒழிக்க வேண்டும்! – மைத்திரி வலியுறுத்து

Share

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு 20 ஆவது அரசியல் திருத்தத்தை இல்லாதொழித்து 19ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் நெருக்கடி நிலைக்கு புதிய அமைச்சரவை நியமனம் தீர்வு பெற்றுக் கொடுக்கப் போவதில்லையென தெரிவித்த அவர், தமது காலத்தில் கொண்டுவரப்பட்ட 19ஆவது அரசியல் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் 11 கட்சிகளின் எம்பிக்கள் மற்றும் பொதுஜனபெரமுன எம்.பிக்கள் குழுவொன்றும் தற்போது ஒன்றாக எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளதைக் காணமுடிகின்றது.

பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் புதிய அமைச்சரவையை அமைப்பதன் மூலம் அப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.

கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்தே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசாங்கத்திலுள்ள அனைவரும் பதவி விலக வேண்டும் என்றும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றுமே நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறெனினும் சபையில் நாம் 40 பேரும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான குழுவாக எதிர்க்கட்சியில் அமரவில்லை. நாம் எதிர்க்கட்சியில் சுயாதீன குழுவாகவே செயற்படுவோம்.

நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் மக்கள் பெரும் ஆத்திரமடைந்துள்ளனர். அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக இவர்களின் போராட்டத்தை நிறுத்த முடியாதென்பது தெரிகின்றது.

தற்போதைய அரசுகடந்த இரண்டு வருடங்களில் செய்த அனைத்து வேலைத்திட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

அதனால் மக்கள் இந்த அரசாங்கத்தை முழுமையாக விலக வேண்டும் என்றே கூறுகின்றனர். அதே நிலைப்பாட்டிலேயே சுதந்திரக் கட்சியும் உள்ளது.

நாட்டுக்கான வேலைத்திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.

20 ஆவது திருத்தத்தை நீக்கி எமது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....