wimal
அரசியல்இலங்கைசெய்திகள்

கௌரவமாகப் பதவி விலகுங்கள்! – மஹிந்தவிடம் விமல் வலியுறுத்து

Share

“2015 ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, கௌரவமான முறையில் மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். அதனால்தான் மக்கள் அவரை மறுபடியும் ஆதரித்தார்கள். எனவே, மக்கள் விரட்டும்வரை காத்திருக்காமல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்.”

– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைத்து நிறைவேற்றிக்கொள்ளும் நடைமுறை என்பது சவாலுக்குரிய விடயமாகும். எனவேதான், புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைத்து, நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். அதற்குப் பிரதமர் பதவி விலக வேண்டும். புதிய பிரதமர் தலைமையில் நாட்டு மக்கள் ஏற்கும் அரசு அமைய வேண்டும்.

இந்த நோக்கில்தான் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினர். அடுத்த சுற்றுப் பேச்சு நடத்தப்படுவதற்குள் எமது அணியில் உள்ள உறுப்பினரை விலைக்கு வாங்கிவிட்டனர். இந்தச் சில்லறைத்தனமான அரசியலை பஸில் ராஜபக்ச தனது சகாக்கள் ஊடாக ஆரம்பித்துள்ளார். ராஜபக்சக்களின் இந்தச் சலூன் கதவு விளையாட்டு எடுபடாது. உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது.

எனவே, சாந்த பண்டாரவுக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுப் பதவியை ஜனாதிபதி உடன் பறித்து, அவரை அரசியல் ரீதியில் அநாதையாக்க வேண்டும். அதனைச் செய்தால் நாளை வேண்டுமானாலும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தத் தயார். ஆனால் தொடர்ந்து அடம்பிடித்துக்கொண்டிருந்தால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...