sanda pandara
அரசியல்இலங்கைசெய்திகள்

சாந்த பண்டாரவின் சுதந்திர கட்சி பதவிகள் நீக்கம்!!

Share

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி கரிம உர உற்பத்தி மற்றும் ஒழுங்குபடுத்தலை ஊக்குவிக்கும் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அனைத்து சுதந்திர கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரச் செயலாளர், பிரதிச் செயலாளர், தம்பதெனிய தேர்தல் அமைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஆளும் கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் அமரத் தீர்மானித்த போதிலும் பண்டார இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

கட்சியின் தலைவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், பண்டாரவை மத்திய குழுவிலிருந்து நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஷசீந்திர ராஜபக்ச அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பண்டார பதவியேற்றார்.

மறுபுறம், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் பதவியை ஏற்றுக்கொண்டதாகவும், அண்மையில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்த 41 பாராளுமன்ற உறுப்பினர்களில் தானும் ஒருவன் எனவும் பண்டார தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...