sanda pandara
அரசியல்இலங்கைசெய்திகள்

சாந்த பண்டாரவின் சுதந்திர கட்சி பதவிகள் நீக்கம்!!

Share

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி கரிம உர உற்பத்தி மற்றும் ஒழுங்குபடுத்தலை ஊக்குவிக்கும் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அனைத்து சுதந்திர கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரச் செயலாளர், பிரதிச் செயலாளர், தம்பதெனிய தேர்தல் அமைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஆளும் கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் அமரத் தீர்மானித்த போதிலும் பண்டார இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

கட்சியின் தலைவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், பண்டாரவை மத்திய குழுவிலிருந்து நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஷசீந்திர ராஜபக்ச அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பண்டார பதவியேற்றார்.

மறுபுறம், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் பதவியை ஏற்றுக்கொண்டதாகவும், அண்மையில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்த 41 பாராளுமன்ற உறுப்பினர்களில் தானும் ஒருவன் எனவும் பண்டார தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 8
இலங்கைசெய்திகள்

196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சார்ஜென்ட் கைது! – முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மைத்துனர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெருமளவு கேரள கஞ்சாவுடன்...

25 68ff21948440b
செய்திகள்இலங்கை

‘எனக்குப் பாதாள உலகத்துடன் தொடர்பில்லை’: காவல்துறை மா அதிபருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சட்ட நடவடிக்கை எச்சரிக்கை

தனக்குப் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியதற்கு...

25 68ff1b2d7e658
விளையாட்டுசெய்திகள்

இந்திய துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் மருத்துவமனையில் அனுமதி: விலா எலும்புக் காயத்தால் உள் இரத்தப்போக்கு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரருமான ஷ்ரேயாஸ் ஐயர்...

25 68ff12db23087
செய்திகள்இலங்கை

மதவாச்சியில் வெடிபொருள் மீட்பு: T-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தீவிர விசாரணை

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி, வஹாமலுகொல்லாவ பகுதியில் நேற்று முன்தினம் (அக்டோபர் 25, 2026) சட்டவிரோதமான...