Kancha Wijesekara
அரசியல்இலங்கைசெய்திகள்

முடிந்தால் பெரும்பான்மையை நிரூபியுங்கள் – எதிரணிக்கு காஞ்சன பகிரங்க சவால்

Share

நாட்டில் மஹிந்த அலையை உருவாக்கி, மஹிந்தவை ஆட்சிப்பீடம் ஏற்றியவர்களே தற்போது, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலக வேண்டும் கோஷம் எழுப்புகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கூறிவிட்டு, யாரை இவர்கள் அழைத்து
வரப்பார்க்கிறார்கள்? எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவையா, அநுரகுமார திஸாநாயக்கவையா,
சம்பிக்கவையா? அல்லது தங்களது மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவா மஹிந்தவை அவர்கள் விலகச் சொல்கிறார்கள்?

உண்மையில் எதிரணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமாக இருந்தால், அல்லது அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்ததாக நீங்கள்bநினைத்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவாருங்கள்.

ஆளுங்கட்சியினர் சுயாதீனமாகச் செயற்படுவதாகக் கூறினாலும் எவரும் அரசிலிருந்து விலகவில்லை. அவர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களுக்கு சென்று அமரவில்லை. எவராவது தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவார்களாக இருந்தால், அதனை விட அவர்கள் பதவிகளில் இருந்து விலகுவதே நல்லது எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...