GettyImages 1229777150
அரசியல்இலங்கைசெய்திகள்

ஏப்ரல் 03 போராட்டத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை! – ஜே.வி.பி. அறிவிப்பு

Share

” ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தின் பின்புலம் என்னவென்று தெரியவில்லை, அதனை ஏற்பாடு செய்வது யாரென்றும் தெரியவில்லை. எனவே, இது தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்.” -இவ்வாறு ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

பொருட்களின் விலையேற்றம், வரிசை நிலைமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 03 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வீதியில் இறங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தன்னெழுச்சி போராட்டம் எனக் கூறப்பட்டாலும், இதனை எற்பாடு செய்வது யாரென தெரியவில்லை. இந்நிலையிலேயே ஜே.வி.பி. இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

” மக்களுக்கு போராடும் உரிமை இருக்கின்றது. எனினும், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தலையிட தலைமைத்துவம் வேண்டும்.” எனவும் அக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, இப் போராட்டத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என 11 கட்சிகளின் கூட்டு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...