Tissa Attanayake
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

பஸில் கூறுவது பொய்! – அழுத்திக்கூறுகிறார் திஸ்ஸ அத்தநாயக்க

Share

” கடன் வழங்குவதற்கு இந்தியா எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கூறுவது பொய். இந்தியாவால் பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் டைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்தியாவால் இலங்கைக்கு ஒரு பில்லியன் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பணமாக அல்ல. இந்த கடனுக்கு எவ்வித நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை என நிதி அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.

இலங்கையின் வான்பரப்பை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கு இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகில் எந்தவொரு நாடும் இவ்வாறு அனுமதி வழங்குவதில்லை. இது நாட்டில் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலான விடயமாகும்.

இலங்கையின் கடல வளத்திலும் இந்திய தலையீட்டை உறுதிப்படுத்தும் விதத்திலான நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், டிஜிட்டல் அட்டை விநியோகத்தின்போது அது தொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. இதன்மூலம் எமது நாட்டு மக்களின் தரவுகள் பிரிதொரு தரப்புக்கு செல்லும் அச்சுறுத்தலும் காணப்படுகின்றது. ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

25 690304e16a39e
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆயுதம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள்...

25 690332f7d691e
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண...

25 690349f3051fc
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் கேலிக்கூத்து நடக்கிறது; வயது முதிர்ந்த ரணிலை விடுங்கள் – டயானா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை...