இலங்கை
விலங்குகளிற்கு உணவு அளிக்கப்போதில்லை: மிரட்டும் மிருகக்காட்சி சாலை ஊழியர்கள்
தெஹிவளை மிருககாட்சி சாலையில் பணிப்பாளருக்கும் ஊழியர்களிற்கும் இடையில் மோதல் காரணமாக மோதல் நிலை உருவாகியுள்ளது.
இலங்கையின் தேசிய உயிரியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகத்திற்கும், ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உயிரியல் திணைக்கள ஊழியர்களிற்கும் இடையிலான மோதல் காரணமாக தெகிவளை மிருககாட்சிசாலையில் உள்ள விலங்குகளின் உயிர்களிற்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தெகிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளை பணயம் வைத்து இரு தரப்பினரும் தங்கள் கோரிக்கைகளை வெல்ல முயல்வதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், மிருகக்காட்சி சாலையில் உள்ள உயிரினங்களிற்கு உணவு வழங்குவதை நிறுத்தப்போவதாக ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login