இலங்கை
மாணவர்களிடம் மூக்குடைபட்ட முருத்தெட்டுவே தேரர்!!(வீடியோ)
கொழும்பு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவின் போது முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற மறுத்தமை குறித்து ஓமல்பே சோபித தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்பை அரசாங்கம் நிச்சயம் புரிந்துகொள்ளவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவின் போது முருத்துவெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெறுவதற்கு மாணவர்கள் விருப்பம் கொள்ளவில்லை. இதுதொடர்பில் கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்;
பல்கலைகழக மாணவர்களின் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். அவர்களின் நடவடிக்கை குறித்து மதிப்பை வெளியிட்டுள்ளனர்.
இது அரசாங்கம் பொதுமக்கள் தங்களை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து மதத் தலைவர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்கலைகழக மாணவர்களின் நடவடிக்கையை கருத்திற்கொள்ளவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login