வெளிநாடுகளில் இயங்கும் 02 தூதரகங்கள் மற்றும் இரண்டு துணைத் தூதரகங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.
நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜேர்மனி மற்றும் சைப்ரஸில் உள்ள இரண்டு துணை தூதரகங்களையும் மூடவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் சேவைக்கான செலவினங்களைக் குறைப்பதன் மூலம் அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும், பல தூதரகங்களை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி இலங்கையின் வெளிநாட்டு வதிவிடப் பணிகளைப் பராமரிப்பதற்கான செலவு 11 பில்லியன் எனக் கூறப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment