இலங்கைசெய்திகள்

ரயில் சேவை மீள ஆரம்பம்?

Share
train nnn
Share

பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும்.

இதனை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக ரயில் சேவை முடக்க நிலையில் உள்ளதால் புகையிரதத் திணைக்களத்துக்கு 500 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எதிர்வரும் காலங்களில் மின்சார ரயில் சேவையை ஆரம்பிக்க திணைக்கள மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...