Vasudeva Wasudeva867989
இலங்கைசெய்திகள்

புலிகள் அமைப்பை தமிழர் ஏற்கவில்லை! – வாசுதேவ

Share

புலிகள் அமைப்பை தமிழர் ஏற்கவில்லை! – வாசுதேவ

பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறு நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு முறையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு விவாதம் இடம்பெறுகிறது.

இராணுவத்தினர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, விடுதலைப் புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.

இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவை ஒருதலைப் பட்சமாக செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானங்கள் நடுநிலையாகக் காணப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகள் அமைப்பை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பினரால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.

புலம்பெயர் அமைப்புக்கள் தங்களின் தேவைக்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை சாதகமாக பயன்படுத்துகின்றன.

நாட்டில் போர் முடிவுற்றபின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தரப்பால் இடம்பெறும் குற்றங்களை அரசின் சர்வாதிகார போக்கு என கருத முடியாது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 5
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு வான்பரப்பு மூடல்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 12 விமான சேவைகளை ரத்து செய்தது!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன்...

06 4
செய்திகள்உலகம்

ஈரான் எல்லையில் அதிரடி: ஊடுருவல் முயற்சியைத் தடுத்ததாக IRGC அறிவிப்பு!

ஈரானின் மேற்கு எல்லைப் பகுதியினூடாக ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பிரிவினைவாதக் குழுக்கள் மீது, ஈரான்...

05 4
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு பதற்றம்: அவுஸ்திரேலியா தனது இராணுவ விமானங்களை அனுப்பி வைத்தது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது...

04 4
செய்திகள்இலங்கை

உணவுப் பொதிகளில் கடத்தப்பட்ட 53.6 கோடி போதைப்பொருள்: மலேசியாவிலிருந்து வந்த பார்சல்கள் சிக்கின!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட சுமார் 536 மில்லியன் ரூபா (53.6...