Vasudeva Wasudeva867989
இலங்கைசெய்திகள்

புலிகள் அமைப்பை தமிழர் ஏற்கவில்லை! – வாசுதேவ

Share

புலிகள் அமைப்பை தமிழர் ஏற்கவில்லை! – வாசுதேவ

பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறு நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு முறையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு விவாதம் இடம்பெறுகிறது.

இராணுவத்தினர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, விடுதலைப் புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.

இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவை ஒருதலைப் பட்சமாக செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானங்கள் நடுநிலையாகக் காணப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகள் அமைப்பை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பினரால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.

புலம்பெயர் அமைப்புக்கள் தங்களின் தேவைக்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை சாதகமாக பயன்படுத்துகின்றன.

நாட்டில் போர் முடிவுற்றபின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தரப்பால் இடம்பெறும் குற்றங்களை அரசின் சர்வாதிகார போக்கு என கருத முடியாது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
செய்திகள்உலகம்

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. பிரான்சில்...

1756280071 Digital ID
செய்திகள்இலங்கை

டிஜிட்டல் அடையாள அட்டை ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

இலங்கை அரசாங்கம் இந்நாட்டுக் குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் கையெழுத்திட்ட...

image 1000x630 9
செய்திகள்இலங்கை

அம்பாறையில் முட்டை விலை குறைவு: வெள்ளை முட்டை ரூ.25-க்கு விற்பனை

அம்பாறை மாவட்டத்தில் தற்போது வெள்ளை முட்டை ஒன்று 25 ரூபாய்க்கும், சிறிய வெள்ளை முட்டை ஒன்று...

image 1000x630 8
செய்திகள்இலங்கை

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு: சலுகை விலையில் விமான டிக்கெட் வழங்கும் சாளரம் திறப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டையில் உள்ள...