Sri Lanka police
இலங்கைசெய்திகள்

மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம

Share

மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம

அடுத்த ஆண்டு முதல் நாட்டில் 15000 பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைக்க முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் நாட்டில் பொலிஸ் சேவையில் 85 ஆயிரம் பொலிஸார் பணிபுரிகின்றனர். எனவும் இன்னமும் 28 ஆயிரம் பேர் பொலிஸ் சேவைக்கு தேவை.

அதன் பிரகாரம் முதற்கட்டமாக 15 ஆயிரம் பேர் இணைத்து பொலிஸ் சேவையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக்குவதற்கான அனுமதியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அரச முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இராணுவத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் பேர் கொண்ட இரு குழுக்களை பயிற்சியளித்து சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...