prai bus scaled
இலங்கைசெய்திகள்

17000 ஆயிரம் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்

Share

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் கொரோனாப் பரவல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ள 17 ஆயிரம் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, கண்டி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரண வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் நிலையில் அதன் பின் சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய போக்குவரத்தை மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சாரதிகள், நடத்துநர்கள் இருவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.

பயணிகளும் தடுப்பூசிகளை ஏற்றியிருத்தல் வேண்டும்.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்லுதல் வேண்டும் போன்ற விடயங்கள் உள்ளடங்கிய புதிய போக்குவரத்துத் திட்டம வகுக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் கொவிட் செயலணி கூடும் முன் குறித்த திட்டத்தை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...