prai bus scaled
இலங்கைசெய்திகள்

17000 ஆயிரம் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்

Share

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் கொரோனாப் பரவல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ள 17 ஆயிரம் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, கண்டி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரண வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் நிலையில் அதன் பின் சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய போக்குவரத்தை மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சாரதிகள், நடத்துநர்கள் இருவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.

பயணிகளும் தடுப்பூசிகளை ஏற்றியிருத்தல் வேண்டும்.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்லுதல் வேண்டும் போன்ற விடயங்கள் உள்ளடங்கிய புதிய போக்குவரத்துத் திட்டம வகுக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் கொவிட் செயலணி கூடும் முன் குறித்த திட்டத்தை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...