image 885239df3c
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

1,660 கால்நடைகள் பலி!

Share

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய சீரற்ற வானிநிலை காரணமாக உயிரிழந்த மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை இன்று (12) மதியத்துடன், 1,660 ஆக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்தது.

வங்கக்கடலில் நிலைகொண்ட மண்டோஸ் புயலால் ஏற்பட்ட திடீர் குளிர் வானிலை காரணமாக, குறித்த மாகாணங்களில் கடந்த வியாழன் (08) மற்றும் வெள்ளி (09) ஆகிய இரு தினங்களில் 802 மாடுகளும் 34 எருமை மாடுகளும் 256 ஆடுகளும் அடங்லாக 1,092 கால்நடைகள் உயிரிழந்தன.

மேலும், இன்று மதியம் வரையிலான காலப்பகுதிக்குள் 568 கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,660ஆக அதிகரித்துள்ளது.

திறந்த வௌியில் தங்கியிருந்த போது நிலவிய கடுமையான குளிரினால் ஏற்பட்ட மன அழுத்தமே கால்நடைகளின் உயிரிழப்புக்கான காரணம் என்று தரவுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர், உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...