image 4606f8a5c0
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கால்வாயில் விழுந்து 14 வயது மாணவன் பலி!

Share

குருணாகலை வஹெர பகுதியில் வீதி அருகே காணப்பட்ட கால்வாயில் விழுந்து 14 வயது மாணவன் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

நாட்டில் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் தொடர் மழை பெய்துவருகின்றது.

இந்நிலையில் குருணாகலை, வஹெர பகுதியில் வீதியோரம் காணப்படும் கால்வாயில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. சிறிய கால்வாயாக இருந்தாலும் வீதி மட்டத்துக்கு நீர் சென்றுள்ளது.

பாடசாலை விட்டு அவ்வீதியூடாக நடந்து சென்ற மாணவன், வாகனமொன்று வந்தவேளை, வீதியோரம் ஒதுங்கியபோதே கால்வாய்க்குள் விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை தேடும் பணி இடம்பெற்றது. எனினும், அவர் பலியானார்.

முறையற்ற விதத்தில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டதாலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...