மின்தடை
இலங்கைசெய்திகள்

நாளை 13 மணி நேரம் மின்வெட்டு!

Share

நாட்டில் நாளை வியாழக்கிழமை 13 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள துஎன இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தால் இலங்கை மின்சார சபையால் இந்த மாதம் 5ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி நாளை A, B, C, D, E, F ஆகிய பிரிவுகளில் காலை 3 மணி முதல் 6 மணி வரை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, மாலை 6 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

G, H, I, J, K, L ஆகிய பிரிவுகளில் காலை 12 மணி முதல் 3 மணி வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

P, Q, R, S ஆகிய பிரிவுகளில் காலை 3 மணி முதல் 6 மணி வரை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, மாலை 6 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

T, U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 12 மணி முதல் 3 மணி வரை, காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

M, N, O, X, Y, Z ஆகிய பிரிவுகளில் காலை 5.30 முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....